08.05.2014
பெறுநர்:
உயர்திரு
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட
ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்.
அன்புடையீர்!
வணக்கம்,
திருப்பூரின்
மையத்தில் அமைந்துள்ள ரயில்வே
பாதையைக் கடக்க ஒரு ரயில்வே
பாலமும்,
இரண்டு ரயில்வே
கேட்டுகளும் அமைந்துள்ளன.
இந்த ரயில்வே
கேட்டுகளை தினசரி,
பள்ளி வாகனங்கள்,
பேருந்துகள்,
சரக்கு வாகனங்கள்
என ஆயிரக்கணக்கானவர்கள்
பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில்,
கொங்குநகர்
பகுதியில் அமைந்துள்ள ரயில்வே
கேட் மூடப்படும் என்ற தகவல்
வந்துள்ளது.
ரயில்வே
கூட் ஷெட் விரிவாக்கத்துக்காக
வரும் 10
ஆம் தேதி முதல்
ரயில்வே கேட் மூடப்படும் என
ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே,
'டி.எம்.எப்'
மருத்துவமனைக்கு
அருகில் கட்டப்பட்டுள்ள
தரைப்பாலம் இதுவரை பயன்பாட்டுக்கு
வரவில்லை.
இந்த நிலையில்
கொங்கு நகர் ரயில்வே கேட்
மூடப்பட்டால்,
ஏற்கனவே நெருக்கடியில்
உள்ள நகர போக்குவரத்து
ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.
எனவே,
டி.எம்.எப்
தரைப்பாலத்தை விரைவாக
பயன்பாட்டுக்கு கொண்டுவரவும்,
அதுவரை கொங்கு
நகர் ரயில்வே கேட் முடப்படுவதை
நிறுத்தி வைக்கவும் வேண்டும்.
மேலும்,
திருப்பூரில்
போக்குவரத்துக் காவல் துறை,
மாநகராட்சி,
நெடுஞ்சாலைத்துறை,
ரயில்வே நிர்வாகம்
ஆகியோரிடையே ஒத்துழைப்பு
இல்லாததாலேயே இதுபோன்ற
சிக்கல்கள் எழுகின்றன.
எனவே,
மாவட்ட நிர்வாகம்
இப்பிரச்சனையில் தலையிட்டு
மாநகரின் போக்குவரத்து
பாதிக்கப்படாத வகையில்,
அரசுத் துறைகளிடையே
ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி
பிரச்சனைக்கு உரிய தீர்வுகாண
நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க்
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
இப்படிக்கு,
கே.தங்கவேல்
MLA,
திருப்பூர்
(தெற்கு)
0 கருத்துகள்:
Post a Comment