தொழில்துறை விவாதத்தில் எம்.எல்.ஏ தங்கவேல் பேசியது ...
கே.தங்கவேல்: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தொழில் நிறுவனங்களை ஈர்த்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது. அவற்றில் கனிசமான அந்நிய நிறுவனங்கள் உள்ளன.
அதிகம் நகர்மயமாகி, "இந்தியாவின் டெட்ராய்ட்" என்று பெயரெடுக்கும் விதத்தில் தமிழகம் உள்ளதாக சென்ற ஆண்டின் கொள்கைக் குறிப்பு பெருமிதத்துடன் தெரிவித்தது. இந்த ஆண்டுக் குறிப்பில் அந்த வாசகம் இல்லை.
ஏனென்றால், அமெரிக்காவின் தொழிற்சாலை நகரமான டெட்ராய்ட் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அங்கு செயல்படும் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இடம்மாற்றவும், பல்லாயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளன. அமெரிக்க அரசு தலையிட்டு, அந்த நகரை பழைய நிலைக்கு மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும், மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் சலுகைகளை அனுபவிக்கின்றன. சலுகைக் காலம் முடிந்ததும், மீண்டும் சலுகைகளைத் தேடி வேறு மாநிலத்திற்கு மாறிச் செல்ல தடையேதுமில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பதும், அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது.
சென்றமுறை இதுகுறித்து பேசிய அமைச்சர் , ஆந்திரமும் பிற மாநிலங்களும் நம்மை விட கூடுதலான சலுகைகள் கொடுத்து, முதலீட்டை ஈர்க்க முயல்கின்றன என்றும், அதனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் சட்டங்கள் அதற்கு ஏதுவாகத்தான் இருக்கின்றன. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் போன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், அந்நிய மூலதனத்திற்கும், தனியார் பெரு நிறுவனங்களுக்கும் அவசியமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
கே.தங்கவேல்: தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தொழில் நிறுவனங்களை ஈர்த்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது. அவற்றில் கனிசமான அந்நிய நிறுவனங்கள் உள்ளன.
அதிகம் நகர்மயமாகி, "இந்தியாவின் டெட்ராய்ட்" என்று பெயரெடுக்கும் விதத்தில் தமிழகம் உள்ளதாக சென்ற ஆண்டின் கொள்கைக் குறிப்பு பெருமிதத்துடன் தெரிவித்தது. இந்த ஆண்டுக் குறிப்பில் அந்த வாசகம் இல்லை.
ஏனென்றால், அமெரிக்காவின் தொழிற்சாலை நகரமான டெட்ராய்ட் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அங்கு செயல்படும் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இடம்மாற்றவும், பல்லாயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளன. அமெரிக்க அரசு தலையிட்டு, அந்த நகரை பழைய நிலைக்கு மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும், மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் சலுகைகளை அனுபவிக்கின்றன. சலுகைக் காலம் முடிந்ததும், மீண்டும் சலுகைகளைத் தேடி வேறு மாநிலத்திற்கு மாறிச் செல்ல தடையேதுமில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பதும், அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது.
சென்றமுறை இதுகுறித்து பேசிய அமைச்சர் , ஆந்திரமும் பிற மாநிலங்களும் நம்மை விட கூடுதலான சலுகைகள் கொடுத்து, முதலீட்டை ஈர்க்க முயல்கின்றன என்றும், அதனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் சட்டங்கள் அதற்கு ஏதுவாகத்தான் இருக்கின்றன. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் போன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், அந்நிய மூலதனத்திற்கும், தனியார் பெரு நிறுவனங்களுக்கும் அவசியமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
Post a Comment