திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை மையப்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் இணைப்புச் சாலைத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என கே.தங்கவேல் MLA பேசினார்.
சட்டமன்றத்தில் தொழில் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அவர் பேசியதாவது: திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை மையப்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் இணைப்புச் சாலைத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
விசைத்தறி ஜவுளி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் விதத்தில் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் அறிவிக்கப்பட்ட ஜவுளிச் சந்தையை செயல்படுத்த வேண்டும். இந்த சந்தையில் உற்பத்திச் சரக்கை அடமானமாகப் பெற்று, குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
விசைத்தறிகளை நவீனமாக்க வார்ப்பு வெப்ட் இணைத்தல், 4 நாடாக்கள் பொருத்தும் விதத்தில் நவீன ட்ரா பாக்ஸ் பொருத்துதல், நாடா இல்லாத தறி அமைத்தல் ஆகியவற்றிற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
திருப்பூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளில் சர்வதேச வர்த்தகர்கள் வந்து செல்ல விதத்தில் கோவை விமான நிலைய விரிவாக்கம் அவசியமாகும். இதற்கு மாநில அரசு தரப்பிலான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் தொழில் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அவர் பேசியதாவது: திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை மையப்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் இணைப்புச் சாலைத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
விசைத்தறி ஜவுளி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் விதத்தில் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் அறிவிக்கப்பட்ட ஜவுளிச் சந்தையை செயல்படுத்த வேண்டும். இந்த சந்தையில் உற்பத்திச் சரக்கை அடமானமாகப் பெற்று, குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
விசைத்தறிகளை நவீனமாக்க வார்ப்பு வெப்ட் இணைத்தல், 4 நாடாக்கள் பொருத்தும் விதத்தில் நவீன ட்ரா பாக்ஸ் பொருத்துதல், நாடா இல்லாத தறி அமைத்தல் ஆகியவற்றிற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
திருப்பூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளில் சர்வதேச வர்த்தகர்கள் வந்து செல்ல விதத்தில் கோவை விமான நிலைய விரிவாக்கம் அவசியமாகும். இதற்கு மாநில அரசு தரப்பிலான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
Post a Comment