புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களை ஆண்டுக்கணகில் இழுத்தடிப்பது குறித்து கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், இப்பிரச்சனைக்கு தீர்வு காண அரசு சிறப்பு கவனமெடுக்கவேண்டுமென்றார்.
இது தொடர்பாக நேற்று, கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ கே.தங்கவேல் எழுப்பிய வினாக்களும், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதில்களும் வருமாறு:
கே.தங்கவேல்: புதிய குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தவர்களுக்கென சிறப்புமுகாம்கள் நடத்த அரசு ஆவன செய்யுமா?
உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் : விண்ணப்பித்தவர்களில் குடும்ப அட்டை பெற தகுதி உள்ளவர்களுக்கு 2 மாதத்திற்குள்புதிய குடும்ப அட்டைவழங்கப்படுகிறது. சென்னையில் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையிலும்,ஏனைய மாவட்டங்களில்மாதத்தின் இரண்டாம்வெள்ளிக்கிழமையிலும் நடைபெறும் குறை தீர்ப்புமுகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய காலத்திற்குள் தீர்வு செய்யப்படுகிறது. எனவே, சிறப்புமுகாம்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
கே.தங்கவேல்: திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 25 ஆயிரம் மனுக்கள் குடும்ப அட்டைகோரி விண்ணப்பிக்கப்படுகிறது. இதில் சரிபாதி திருப்பூர் வட்டத்தில் இருந்து மட்டும் விண்ணப்பிக்கப்படுகிறது. திருப்பூர் தொழில் வளர்ச்சி,மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப நிர்வாக வசதிஇல்லை. குடும்ப அட்டைகேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 1 முதல் 4 ஆண்டுகளாகியும் வழங்கப்படாமல் உள்ளது. திருப்பூர் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டிருந்தாலும் போதியஊழியர்கள் இல்லை.உரிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் உள்ளது.திருப்பூருக்கான குடும்பஅட்டைகள் கோவையில் அச்சடிக்கப்படுகிறது.அதனை மேற்பார்வையிட வேண்டிய அதிகாரி ஈரோட்டில் இருக்கிறார். இதுபோன்ற நிர்வாக பிரச்சனைகளை சரி செய்து புதிய அட்டைகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர்: உறுப்பினர் அவைக்கு தவறான தகவலை தெரிவிக்கிறார். புதிய குடும்ப அட்டைகளுக்கு உரியஆவனத்துடன் விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் ஆய்வு செய்து வழங்கப்படுகிறது. திருப்பூரில் 1.6.2011 முதல் 30.6.2014 வரையில் 57 ஆயிரத்து 638 மனுக்கள் வந்துள்ளன. இவற்றில் 56 ஆயிரத்து 605 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 46 ஆயிரத்து 749 மனுக்கள் குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவனங்கள் இல்லாததால் 9 ஆயிரத்து 856 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எஞ்சியுள்ள 1033 மனுக்கள் விசாணையில் உள்ளன. 60 நாட்களுக்கு மேல்ஒரு மனு கூட இல்லை.இதில்கூட ஒரு மாத நிலையில்தான் 1033 மனுக்களும் உள்ளன. திருப்பூரில் ஏற்கெனவே 28 ஆயிரத்து 294 குடும்ப அட்டைகள் இருந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக 14 ஆயிரத்து 5 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
கே.தங்கவேல்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மகன் பாரதி குடும்ப அட்டை கேட்டு மனுத்தாக்கல் செய்து 6 மாதமாகிறது. 2 முறை வட்டாட்சியரிடம் பேசிஇருக்கிறேன். பாரதி அவரது மனைவி ஆகியோரின் ஆவனங்கள் சமர்பித்தும் குடும்ப அட்டை வழங்கப்படாமல் உள்ளது. அதிகாரிகள் சொல்வது முழுவதும் உண்மையா என அமைச்சர் பார்க்க வேண்டும்.தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வந்துதிருப்பூரில் குடியேறியவர்கள் ஆவணங்களுடன்விண்ணப்பித்தாலும் குடும்ப அட்டை கிடைப்பதில்லை. அமைச்சர் அதனைஆய்வு செய்யவேண்டும். 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுப்பதில்லை.
அமைச்சர்: உறுப்பினர் குறிப்பிடுகிறவர் ஆவனங்களை முழுமையாக சமர்ப்பித்திருக்க மாட்டார். குடும்பஅட்டைக்கு விண்ணப்பிக்கும்போது பழைய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான சான்று, 5 ஆண்டுகள்ஒரே இடத்தில் இருந்துகுடும்ப அட்டை பெறாததற்கு காரணம், வாக்காளர் அடையாள அட்டை,முந்தைய குடும்ப அட்டைஒப்படைப்பு சான்றுஆகியவற்றை வழங்க வேண்டும். உறுப்பினரின் புகார் குறித்து விசாரிக்கப்படும்.அரசின் விலையில்லா பொருட்களை பெறுவதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறுபெயர்களில் விண்ணப்பிக்கின்றனர். இதனால் பலருக்கு குடும்ப அட்டைவழங்க முடியவில்லை.பின்னர் பேசிய அமைச்சர், பாரதிக்கு குடும்ப அட்டை 10.2.2014 அன்று வழங்கப்பட்டு விட்டதுஎன்றார். ஆனால், விண்ணப்பித்து எத்தனை நாட்களாகி வழங்கப்பட்டது என்ற விபரத்தை அவர் குறிப்பிடவில்லை.
இது தொடர்பாக நேற்று, கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ கே.தங்கவேல் எழுப்பிய வினாக்களும், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதில்களும் வருமாறு:
கே.தங்கவேல்: புதிய குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தவர்களுக்கென சிறப்புமுகாம்கள் நடத்த அரசு ஆவன செய்யுமா?
உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் : விண்ணப்பித்தவர்களில் குடும்ப அட்டை பெற தகுதி உள்ளவர்களுக்கு 2 மாதத்திற்குள்புதிய குடும்ப அட்டைவழங்கப்படுகிறது. சென்னையில் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையிலும்,ஏனைய மாவட்டங்களில்மாதத்தின் இரண்டாம்வெள்ளிக்கிழமையிலும் நடைபெறும் குறை தீர்ப்புமுகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய காலத்திற்குள் தீர்வு செய்யப்படுகிறது. எனவே, சிறப்புமுகாம்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
கே.தங்கவேல்: திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 25 ஆயிரம் மனுக்கள் குடும்ப அட்டைகோரி விண்ணப்பிக்கப்படுகிறது. இதில் சரிபாதி திருப்பூர் வட்டத்தில் இருந்து மட்டும் விண்ணப்பிக்கப்படுகிறது. திருப்பூர் தொழில் வளர்ச்சி,மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப நிர்வாக வசதிஇல்லை. குடும்ப அட்டைகேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 1 முதல் 4 ஆண்டுகளாகியும் வழங்கப்படாமல் உள்ளது. திருப்பூர் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டிருந்தாலும் போதியஊழியர்கள் இல்லை.உரிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் உள்ளது.திருப்பூருக்கான குடும்பஅட்டைகள் கோவையில் அச்சடிக்கப்படுகிறது.அதனை மேற்பார்வையிட வேண்டிய அதிகாரி ஈரோட்டில் இருக்கிறார். இதுபோன்ற நிர்வாக பிரச்சனைகளை சரி செய்து புதிய அட்டைகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர்: உறுப்பினர் அவைக்கு தவறான தகவலை தெரிவிக்கிறார். புதிய குடும்ப அட்டைகளுக்கு உரியஆவனத்துடன் விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் ஆய்வு செய்து வழங்கப்படுகிறது. திருப்பூரில் 1.6.2011 முதல் 30.6.2014 வரையில் 57 ஆயிரத்து 638 மனுக்கள் வந்துள்ளன. இவற்றில் 56 ஆயிரத்து 605 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 46 ஆயிரத்து 749 மனுக்கள் குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவனங்கள் இல்லாததால் 9 ஆயிரத்து 856 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எஞ்சியுள்ள 1033 மனுக்கள் விசாணையில் உள்ளன. 60 நாட்களுக்கு மேல்ஒரு மனு கூட இல்லை.இதில்கூட ஒரு மாத நிலையில்தான் 1033 மனுக்களும் உள்ளன. திருப்பூரில் ஏற்கெனவே 28 ஆயிரத்து 294 குடும்ப அட்டைகள் இருந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக 14 ஆயிரத்து 5 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
கே.தங்கவேல்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மகன் பாரதி குடும்ப அட்டை கேட்டு மனுத்தாக்கல் செய்து 6 மாதமாகிறது. 2 முறை வட்டாட்சியரிடம் பேசிஇருக்கிறேன். பாரதி அவரது மனைவி ஆகியோரின் ஆவனங்கள் சமர்பித்தும் குடும்ப அட்டை வழங்கப்படாமல் உள்ளது. அதிகாரிகள் சொல்வது முழுவதும் உண்மையா என அமைச்சர் பார்க்க வேண்டும்.தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வந்துதிருப்பூரில் குடியேறியவர்கள் ஆவணங்களுடன்விண்ணப்பித்தாலும் குடும்ப அட்டை கிடைப்பதில்லை. அமைச்சர் அதனைஆய்வு செய்யவேண்டும். 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுப்பதில்லை.
அமைச்சர்: உறுப்பினர் குறிப்பிடுகிறவர் ஆவனங்களை முழுமையாக சமர்ப்பித்திருக்க மாட்டார். குடும்பஅட்டைக்கு விண்ணப்பிக்கும்போது பழைய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான சான்று, 5 ஆண்டுகள்ஒரே இடத்தில் இருந்துகுடும்ப அட்டை பெறாததற்கு காரணம், வாக்காளர் அடையாள அட்டை,முந்தைய குடும்ப அட்டைஒப்படைப்பு சான்றுஆகியவற்றை வழங்க வேண்டும். உறுப்பினரின் புகார் குறித்து விசாரிக்கப்படும்.அரசின் விலையில்லா பொருட்களை பெறுவதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறுபெயர்களில் விண்ணப்பிக்கின்றனர். இதனால் பலருக்கு குடும்ப அட்டைவழங்க முடியவில்லை.பின்னர் பேசிய அமைச்சர், பாரதிக்கு குடும்ப அட்டை 10.2.2014 அன்று வழங்கப்பட்டு விட்டதுஎன்றார். ஆனால், விண்ணப்பித்து எத்தனை நாட்களாகி வழங்கப்பட்டது என்ற விபரத்தை அவர் குறிப்பிடவில்லை.
0 கருத்துகள்:
Post a Comment