மாவட்டத் தலைநகரமாக தரம் உயர்ந்துள்ள திருப்பூரில் சுகாதாரத்தைப்
பலப்படுத்த மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை அதிநவீன கருவிகளுடன்,
அனைத்து சிறப்புப் பிரிவு மருத்துவர்கள் செயல்படும் வகையில் சூப்பர்
ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய திருப்பூர் மாநகர மக்கள் கோரிக்கை மாநாடு
கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் அரிசிக் கடை வீதியில் செவ்வாயன்று மாலை நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் வரவேற்றார். இந்த மாநாட்டில் திருப்பூர் மாநகர மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்எல்ஏ பணிகள் சிறு நூல் வெளியீடு : இம்மாநாட்டில், கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் திருப்பூர் தெற்குத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் செய்திருக்கும் பணிகள் குறித்து, “கே.தங்கவேல் எம்எல்ஏவின் மக்கள் பணிகள்” என்ற சிறு நூலை மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.
அதை மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் பெற்றுக் கொண்டார். தொகுதி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இந்த சிறுநூலை கொண்டு சேர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டிருக்கும் பணியை விளக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, தேவையான மருத்துவ ஊழியர்களை நியமித்து அனைத்து நவீன மருத்துவ சிகிச்சைக்குரிய வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஞாயிறு விடுமுறையை உறுதி செய்வதுடன், அடுக்குமாடி குடியிருப்பு, இருபால் தொழிலாளர் தங்கும் விடுதிகள் ஏற்படுத்த வேண்டும், நகரின் பேக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துவது, கட்டி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பாலங்களை கட்டி முடிப்பது, இங்குள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக்குகள் உருவாக்குவது, அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது உள்ளிட்ட பணிகலை தமிழக அரசும், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.
மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம் வழிமொழிய பலத்த கரவொலியோடு இத் தீர்மானம் நிறைவேறியது.இந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் ஆகியோர் உரையாற்றினர். திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ நன்றி கூறினார்.
(நன்றி: தீக்கதிர், தினகரன், தினமலர், தினத் தந்தி, தி இந்து மற்றும் The Hindu)
திருப்பூர் அரிசிக் கடை வீதியில் செவ்வாயன்று மாலை நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் வரவேற்றார். இந்த மாநாட்டில் திருப்பூர் மாநகர மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்எல்ஏ பணிகள் சிறு நூல் வெளியீடு : இம்மாநாட்டில், கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் திருப்பூர் தெற்குத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் செய்திருக்கும் பணிகள் குறித்து, “கே.தங்கவேல் எம்எல்ஏவின் மக்கள் பணிகள்” என்ற சிறு நூலை மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.
அதை மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் பெற்றுக் கொண்டார். தொகுதி முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இந்த சிறுநூலை கொண்டு சேர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டிருக்கும் பணியை விளக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, தேவையான மருத்துவ ஊழியர்களை நியமித்து அனைத்து நவீன மருத்துவ சிகிச்சைக்குரிய வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஞாயிறு விடுமுறையை உறுதி செய்வதுடன், அடுக்குமாடி குடியிருப்பு, இருபால் தொழிலாளர் தங்கும் விடுதிகள் ஏற்படுத்த வேண்டும், நகரின் பேக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துவது, கட்டி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பாலங்களை கட்டி முடிப்பது, இங்குள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக்குகள் உருவாக்குவது, அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது உள்ளிட்ட பணிகலை தமிழக அரசும், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.
மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம் வழிமொழிய பலத்த கரவொலியோடு இத் தீர்மானம் நிறைவேறியது.இந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் ஆகியோர் உரையாற்றினர். திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ நன்றி கூறினார்.
(நன்றி: தீக்கதிர், தினகரன், தினமலர், தினத் தந்தி, தி இந்து மற்றும் The Hindu)
0 கருத்துகள்:
Post a Comment