திருப்பூர், ஜூன் 24-திருப்பூரில் வேலை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்கள் பணியில் பாதுகாப்பும் இல்லாமல், சொற்ப ஊதியத்தில் வேலை செய்யும்நிலையில் சட்டப்பாதுகாப்பு வழங்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்துக்கு செக்யூரிட்டித் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் க.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த உண்ணாவிரதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். இதில் செக்யூரிட்டி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும். பல்வேறு இடங்களில் கொள்ளையர்கள், சமூக விரோதிகளால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பும், உடலுறுப்பு இழப்பும் ஏற்பட்டு வரும் நிலையில் செக்யூரிட்டி தொழிலாளர்களுக்கு ஈ.எஸ்.ஐ., பி.எப்., கிராஜூவிட்டி, போனஸ் உள்ளிட்ட சட்ட உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமானசெக்யூரிட்டி தொழிலாளர்கள் கலந்து கொதிருப்பூர், ஜூன் 24-திருப்பூரில் வேலை செய்யும் செக்யூரிட்டி தொழிலாளர்கள் பணியில் பாதுகாப்பும் இல்லாமல், சொற்ப ஊதியத்தில் வேலை செய்யும்நிலையில் சட்டப்பாதுகாப்பு வழங்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
0 கருத்துகள்:
Post a Comment