சட்டப்பேரவையில்
புதனன்று (ஜூலை 16) துணைக்கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி உறுப்பினர் கே.தங்கவேல், சிக்கண்ணா கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் எப்போது கட்டப்படும் என கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அரசுக் கல்லூரிகள் தொடர்பான விவாதம் வந்தது. அப்போது எம்.எல்.ஏ கே.தங்கவேல் துணைக் கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது, "சிக்கண்ணா அரசு கலை
அறிவியல் கல்லூரியில் புதிதாக 5 பாடப்பிரிவுகளுக்கு அரசு அனுமதி
அளித்துள்ளது. ஆனால் வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் கூட்டரங்கம்
உள்ளிட்ட இடங்களில் வகுப்பறைகள் நடைபெறுகின்றன. போதிய வகுப்பறைகள்
இல்லாததால் மாணவர்களின் சேர்க்கை பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு
கூடுதலாக 10 வகுப்பறைகள் கட்டித்தரப்படுமா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், இது
குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதிநிலைக்கு ஏற்ப
பரிசீலிக்கப்படும் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment