வெள்ளியன்று (ஆக.1) கேள்வி நேரத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி உறுப்பினர்
கே.தங்கவேல் எழுப்பிய வினாக்களும், அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும்
வருமாறு:
கே.தங்கவேல்: திருப்பூரில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவமனை கட்டிடம் கட்ட அரசு ஆவன செய்யுமா?
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன்: திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்கு கட்டட வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. அந்த வரைபடத்தை தொழிலாளர் மாநில காப்புறுத்திக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணி தொடங்கும்.
கே.தங்கவேல்: திருப்பூர் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்துவந்து தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில் கோவைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட இடம் தேர்வுசெய்யப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பணி தொடங்கப்படவில்லை. விரைவாக பணிகளை முடித்து 100 படுக்கை கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படுமா? எப்போது மருத்துவமனை கட்டும் பணி தொடங்கும்?
அமைச்சர்: இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 11 கோடியே 90 லட்சத்து 77ஆயிரத்து 566 ரூபாய் மதிப்பில் இடம் வாங்கப்பட்டது. முதல்கட்டமாக நவம்பர் மாதம் முதல் 72 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தபணி விரைவாக முடிக்கப்படும்.
கே.தங்கவேல்: சுற்றுச்சுவர் அமைக்கும் இடத்தை சிலர் சொந்தம் கொண்டாடி கட்டுமானப் பணிகளை தடுத்துநிறுத்தி, நீதிமன்ற வழக்கிற்கு சென்றுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்குவழக்கை தொடுத்தவர்களும் வராமல், அரசு அதிகாரிகளும் செல்லாமல் வழக்கு முடியாமல் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து கட்டிடம் கட்டும் பணியை விரைவாக தொடங்கப்படுமா?
அமைச்சர்: வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, விரைவாக பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.வால்பாறையில் இஎஸ்ஐ மருந்தகம்?அப்போது துணைக்கேள்வி எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை தொகுதிஉறுப்பினர் எம்.ஆறுமுகம், விதி 110ன் கீழ் வால்பாறையில் இஎஸ்ஐமருந்தகம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். எப்போது மருந்தகம் அமைக்கப்படும்? திருப்பூரில் தொழிலாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்காத குறைபாடுஉள்ளது. அது சரிசெய்யப்படுமா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், மருந்தகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிட பணி விரைவில் தொடங்கும் என்றார்.
கே.தங்கவேல்: திருப்பூரில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவமனை கட்டிடம் கட்ட அரசு ஆவன செய்யுமா?
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன்: திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்கு கட்டட வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. அந்த வரைபடத்தை தொழிலாளர் மாநில காப்புறுத்திக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணி தொடங்கும்.
கே.தங்கவேல்: திருப்பூர் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்துவந்து தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில் கோவைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட இடம் தேர்வுசெய்யப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பணி தொடங்கப்படவில்லை. விரைவாக பணிகளை முடித்து 100 படுக்கை கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படுமா? எப்போது மருத்துவமனை கட்டும் பணி தொடங்கும்?
அமைச்சர்: இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 11 கோடியே 90 லட்சத்து 77ஆயிரத்து 566 ரூபாய் மதிப்பில் இடம் வாங்கப்பட்டது. முதல்கட்டமாக நவம்பர் மாதம் முதல் 72 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தபணி விரைவாக முடிக்கப்படும்.
கே.தங்கவேல்: சுற்றுச்சுவர் அமைக்கும் இடத்தை சிலர் சொந்தம் கொண்டாடி கட்டுமானப் பணிகளை தடுத்துநிறுத்தி, நீதிமன்ற வழக்கிற்கு சென்றுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்குவழக்கை தொடுத்தவர்களும் வராமல், அரசு அதிகாரிகளும் செல்லாமல் வழக்கு முடியாமல் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து கட்டிடம் கட்டும் பணியை விரைவாக தொடங்கப்படுமா?
அமைச்சர்: வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, விரைவாக பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.வால்பாறையில் இஎஸ்ஐ மருந்தகம்?அப்போது துணைக்கேள்வி எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை தொகுதிஉறுப்பினர் எம்.ஆறுமுகம், விதி 110ன் கீழ் வால்பாறையில் இஎஸ்ஐமருந்தகம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். எப்போது மருந்தகம் அமைக்கப்படும்? திருப்பூரில் தொழிலாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்காத குறைபாடுஉள்ளது. அது சரிசெய்யப்படுமா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், மருந்தகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிட பணி விரைவில் தொடங்கும் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment