Tuesday 5 August 2014

பாரதியார் பல்கலைகழக நிலம்: விவசாயிகளுக்கு இழப்பீடு எப்போது - கே.தங்கவேல் MLA


சென்னை, ஆக. 4 -கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி முழு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.சட்டப்பேரவையில் திங்களன்று (ஆக.4) இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களும் அமைச்சரின் பதில்களும் வருமாறு:

தா.மலரவன் (அதிமுக): பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா?

அமைச்சர்: கோவை பல்கலைக் கழகத்திற்கு வடவள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் 994.04 ஏக்கர் நிலத்தை வழங்கினர். அவர்களுக்கு அப்போதைய மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்கப்பட்டது. நிலம் கொடுத்தவர்களில் 110 நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.அரசு வழங்கிய இழப்பீடுபோதவில்லை என்று கூறி 19குழுக்களாக நீதிமன்றத்தை நாடினர். அவர்களுக்கு 120கோடி ரூபாய் கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. கூடுதல் இழப்பீட்டு தொகையை வழங்க உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது.அதனடிப்படையில் கோவைநீதிமன்றத்தில் ரூ. 42.41 கோடி செலுத்தப்பட்டது. அதில் ரூ.38.47கோடி, நிலம் கொடுத்தவர்களுக்கு உத்தரவிடப்பட்டு ரூ.31.47 கோடி வழங்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள ரூ.6.69கோடி ரூபாயை பெற உள்ள 20 வாரிசுதாரர்களின் உண்மை தன்மை கண்டறியப்பட்டு வருகிறது. அது முடிந்ததும் அந்த தொகையும் வழங்கப்படும்.

கே.தங்கவேல் (சிபிஎம்): கூடுதல் இழப்பீடு தொகை முதல் தவணையாக 42 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 161 கோடி ரூபாய் எப்போது வழங்கப்படும்? அரசும், பல்கலைக் கழக நிர்வாகமும் நீதிமன்ற வழக்கிற்கு செல்லஉள்ளதாக தெரிகிறது. 35 வருடமாக நடைபெறும் பிரச்சனையைமேலும் சிக்கலாக்காமல் இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்குமா?

அமைச்சர்: பயனாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவுடன், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மீதித்தொகை வழங்கப்படும்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)