சென்னை, ஆக. 4 -கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி முழு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.சட்டப்பேரவையில் திங்களன்று (ஆக.4) இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களும் அமைச்சரின் பதில்களும் வருமாறு:
தா.மலரவன் (அதிமுக): பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா?
அமைச்சர்: கோவை பல்கலைக் கழகத்திற்கு வடவள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் 994.04 ஏக்கர் நிலத்தை வழங்கினர். அவர்களுக்கு அப்போதைய மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்கப்பட்டது. நிலம் கொடுத்தவர்களில் 110 நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.அரசு வழங்கிய இழப்பீடுபோதவில்லை என்று கூறி 19குழுக்களாக நீதிமன்றத்தை நாடினர். அவர்களுக்கு 120கோடி ரூபாய் கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. கூடுதல் இழப்பீட்டு தொகையை வழங்க உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது.அதனடிப்படையில் கோவைநீதிமன்றத்தில் ரூ. 42.41 கோடி செலுத்தப்பட்டது. அதில் ரூ.38.47கோடி, நிலம் கொடுத்தவர்களுக்கு உத்தரவிடப்பட்டு ரூ.31.47 கோடி வழங்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள ரூ.6.69கோடி ரூபாயை பெற உள்ள 20 வாரிசுதாரர்களின் உண்மை தன்மை கண்டறியப்பட்டு வருகிறது. அது முடிந்ததும் அந்த தொகையும் வழங்கப்படும்.
கே.தங்கவேல் (சிபிஎம்): கூடுதல் இழப்பீடு தொகை முதல் தவணையாக 42 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 161 கோடி ரூபாய் எப்போது வழங்கப்படும்? அரசும், பல்கலைக் கழக நிர்வாகமும் நீதிமன்ற வழக்கிற்கு செல்லஉள்ளதாக தெரிகிறது. 35 வருடமாக நடைபெறும் பிரச்சனையைமேலும் சிக்கலாக்காமல் இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்குமா?
அமைச்சர்: பயனாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவுடன், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மீதித்தொகை வழங்கப்படும்.
0 கருத்துகள்:
Post a Comment