Saturday 28 November 2015

30 ஆண்டுகளுக்கு முந்தைய குடிநீர் குழாய்களை மாற்ற கே.தங்கவேல் எம்.எல்.ஏ. குடிநீர் வாரியத்திற்கு கடிதம்

  கே.தங்கவேல் எம்.எல்.ஏ.  சென்னையில் நேரடியாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திற்குச் சென்று நிர்வாக இயக்குநரிடம் கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 
            திருப்பூர் மாநகராட்சிக்கு இரண்டாவது குடிநீர் திட்டம்மூலம் கிடைக்கும் குடிநீர் கணிசமான மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஆனால் மேற்கண்ட திட்டத்திற்காக போடப்பட்ட பிரதான நீரேற்றக் குழாய் மற்றும் விநியோகக் குழாய்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். இதனால் சாலை, சாக்கடை, பாலங்கள், குடிநீர் இணைப்புகள், தொலைபேசி இணைப்புகள் போன்றவைகளுக்காக குழி தோண்டும் போதும், பல்வேறு காரணங்களாலும் பிரதான குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. உடைந்த குழாய்களை சரி செய்ய முடியாமல் சாலைகள் குண்டும், குழியுமாகச் சேதமடைந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதோடு, வாகனங்களில் செல்வோர் இந்த சாலைகளில் விபத்துக்களில் சிக்குவதும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இரண்டாவது குடிநீர்த் திட்டக் குழாய்களை மாற்றுவதற்கும், புதிய குடிநீர் குழாய்களைப் போடுவதற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திருப்பூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும்படி கே.தங்கவேல் எம்.எல்.ஏ., அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)