2013 - தமிழக அரசின் நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ மின்வெட்டு குறித்து பேசியது ...
கே.தங்கவேல்: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட் டங்களில் சிறு, குறு தொழில்களான என் ஜினியரிங் சம்பந்தப்பட்ட, பனியன், பவர் லூம், கைத்தறி, கார்மெண்ட்ஸ் ஆகிய தொழில்கள் மின்வெட்டாலும், மத்திய அரசின் கொள்கைகளாலும் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சு, நூல் ஏற்றுமதி இறக்குமதி கொள்கையினாலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதனை ஈடுகட்டும் வகையில் ஜெனரேட்டர் மூலம் மின்சார உற்பத்தியை தொடங்கி ஓர ளவு பாதிப்பைக் குறைக்க டீசலுக்கு மானி யம் வழங்கிட வேண்டும்.
ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன்: சிறு குறு தொழில்கள் பாதிக் கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இந்த நிறு வனங்கள் ஜெனரேட்டர்கள் வாங்க ஏற்க னவே அளிக்கப்பட்டுவந்த உதவித் தொகையை 1.5லட்சம் ரூபாயில் இருந்து 5லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. ஜெனரேட்டர்கள் மீது தற்போது விதிக்கப் பட்டுள்ள மதிப்புகூட்டுவரியை 14.5 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காட்டாக குறைத்துள்ளது. தமிழநாடு தொழில்முத லீட்டு கழகம் மூலம் கடன் பெற்று ஜென ரேட்டர்கள் வாங்க சிறு குறு தொழில் நிறு வனங்கள் விண்ணப்பித்தால் பங்குத் தொகையாக 20 விழுக்காடு தொகையை செலுத்தவேண்டும் என்பதை 10 விழுக் காடாக அரசு குறைத்துள்ளது அரசு. மேலும் டீசல் ஜெனரேட்டருக்கு பயன் படுத்தப்படும் பர்னர்ஸ் ஆயில் மீதான மதிப்புகூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது.
கே.தங்கவேல்: ”மின் பற்றாக்குறை குறித்து வெள்ளை யறிக்கை வெளியிட வேண்டும். கோடை காலம் என்பதால் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும். தொழில்துறையும், விவசாய மும் பெருமளவு பாதிப்படையும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு உடனடி நடவடிக்கையும், நீண்ட கால திட்டம் தேவைப்படுகிறது.”
(முழுமையான விவாதம்)
0 கருத்துகள்:
Post a Comment