Tuesday, 14 May 2013

தமிழகத்தில் எந்தபகுதியிலும் 12 மணிநேர மின்வெட்டு இல்லை!: அமைச்சர் பதில்


கே.தங்கவேல்: இந்தியாவிலேயே அதிக அளவில் தொழில் வளம் பெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அனைத்து வீடுகளும் மின் இணைப்பு பெற்றுள்ள சாதனையைப் படைத்திட்ட தமிழகம்  தனிநபர் மின் நுகர்விலும் தேசிய சராசரிக்கு கூடுதலாக கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது பெரிய அளவில் மின் பற்றாக்குறையால் தவித்துவருகிறது. தமிழகம் முழுவதும் நிலவும் மின்வெட்டால் தொழில் நசிவும், வேலை இழப்பும் ஏற்பட்டும் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.  கிராமப்புறங்களில் 12 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு நிலவுவதால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: தமிழகத்தில் எந்தபகுதியிலும் 12 மணிநேர மின்வெட்டு இல்லை.கடந்த ஒருவாரமாக கிராமப்புறங்களில் 10 மணிநேரம் சென்னையில் 2மணிநேரம் இருந்த மின்வெட்டு நீக்கப்பட்டு எல்லா நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்வெட்டு இருந்தாலும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தனிநபர் மின்சார நுகர்வு அளவு அதிகமாக உள்ளது.மின்சார நுகர்வும் அதிகமாக உள்ளதால் மற்ற மாநிலங்களை விட நமக்கு மின்சாரத்தேவையும் அதிகமாக உள்ளது. மின்சார தேவை அதிகமாக உள்ளதால் அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. வரும் ஜூன்மாதம் முதல் மின்வெட்டு  படிப்படியாக குறைக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறும். அதற்கு ஏற்ப புயல் வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)