Monday, 13 May 2013

அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: கே.தங்கவேல் எம்.எல்.ஏ!


சென்னை, மே.13-

சட்டப்பேரவையில் மே.13 அன்று நடந்த கேள்வி நேரத்தில்  பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், திருப்பூர் மாவட்டத்தில் அகல்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் அருகே அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்
கே.தங்கவேல்: திருப்பூர் அருகே தொல்லியல் துறை சார்ந்த கொடுமணல் பகுதியில் சுமார் 100 ஏக்கரில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானைகள் அங்கு கிடைத்துள்ளன.

அதே போல, காங்கேயம் பகுதியில் 10 இடங்களிலும் உடுமலை சொங்கல் நகர் உட்பட 4 இடங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் செய்வதற்கான இடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 300 ஏக்கர் பரப்பில் இது உள்ளது இவைகளைச் சேகரித்து திருப்பூர் மாவட்டத்தில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
கொடுமணல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டமைப்பு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன்: தொல்லியல் துறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழ்வாய்வு செய்து அங்கு கிடைக்கும் தொல்லியல் பொருட்களைக் கொண்டு, அப்பகுதி மக்கள் அறியும் வண்ணம் அந்த ஊரிலேயே அகழ்வைப்பகம் அமைத்து வருகிறது.

மேலும், தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், தஞ்சை அரண்மனை, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை ஆகிய இடங்களில் அகழ் வைப்பகங்கள் அமைந்துள்ளன.

திருப்பூர் மாவட்டத்தின் அருகில் உள்ள கோவை மாவட்டத்தில் தொல்லியல் துறையால் அகழ் வைப்பகம் ஒன்று இயங்கிவருகிறது. எனவே இதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

கே.தங்கவேல்: திருப்பூர் மாவட்டத்தில் கல்வெட்டுக்கள், சுவர் ஓவியங்கள் ஏராளம் உள்ளன. அவைகளை கவனத்தில் கொண்டு இந்த மாவட்டத்திற்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆய்வு செய்து, மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

அமைச்சர் வைகைச் செல்வன்:  தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 14 அகழ் வைப்பகங்கள் உள்ளன. அவை, தேனிசைக்கோட்டை, ஆழ்கடல் (நாகை), கங்கைகொண்ட சோழ புரம் (அரியலூர்), ராமலிங்கவிலாஸ் (ராமநாதபுரம்), ஆற்காடு அகழ்வைப்பகம் (வேலூர்), வரலாற்றுக்கு முந்தைய கால அகழ்வைப்பகம் (திருவள்ளூர்), திருமலை நாயக்கர் அரண்மனை (மதுரை), ராஜராஜன் மராட்டா (தஞ்சாவூர்), குற்றாலம் (திருநெல்வேலி), திருக்கோவிலூர் (விழுப்புரம்), தருமபுரி, கரூர், கோவை ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சான்றுகள், பிற்கால ஈமச் சின்னங்கள், கல்வெட்டுக்கள், மணல் மேடுகள் கிடைக்கப்பெற்றால் - எதிர்காலத்தில் துறை சார்பில் கருத்தாய்வு செய்து - முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)