Monday, 6 May 2013

நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பதில் ஜனநாயகத் தன்மை வேண்டும் !


புதிதாக உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் குறித்து மாற்றுக் கருத்திருப் பின் மேல்முறையீட்டுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
மேல்முறையீடுகளை விசா ரிக்க வெளிப்படையான நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறைந்த அளவில் நிலம் வாங்கும், ஏழை எளியமக்கள் பாதிக் காத வகையில் பதிவுத்துறை சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சர் ரமணா: பதிவுத்துறை யில் மேல்முறையிட்டிற்கு முத்திரைத் தாள் சட்டம் 47 படி வாய்ப்பளிக்கப்படு கிறது. பதிவு செய்யும் நபர்கள் வழிக்காடு மதிப்பீடு அதிமாக இருப்பதாக கருதி னால் சார்பதிவாளரிடம் முத்திரைத்தீர்வு சட்டம் 47ன் கீழ் வழிக்காட்டு மதிப்பீட்டை காட்டிலும் விலைகுறைவாக பதிவுசெய்ய வாய்ப்பிருக்கிறது. கடந்தாண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்தி 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆவனங்களை சென்னை மற்றும் கோவை யில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி கள், 9 இடங்களில் உள்ள துணை ஆட்சி யர்கள் தகுதியான முறையில் வெளிப் படையான முறையில் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை வரவழைத்து ஆணை பிறப்பிப்பார்கள். 

கே.தங்கவேல்: மேல்முறையிட்டிற்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்கிறபோது மேல் முறையீடே அந்த அதிகாரிகளிடம் தான் செய்யவேண்டியுள்ளது. எனவே அதற்கான முறையில் வழிக்காட்டுமுறை கள் பொதுமக்கள் பிரதிநிதிகள், பஞ் சாயத்து, நுகர்வோர் பிரதிநிதிகளை கொண்டு ஒரு அமைப்பு ஏற்படுத்தி தீர்வு காணவேண்டும்.

அமைச்சர் ரமணா: சென்னை மற்றும் கோவையில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரிகள், 9 இடங்களில் உள்ள துணை ஆட்சியர்கள் ஆகியோர் ஆய்வு நடத்திய பின்னரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் கள் மாநில பத்திரபதிவுத்துறை தலைவர் தலைமையில் உள்ள குழுவில் மேல்முறை யீடு செய்யலாம். அதிலும் பாதிக்கப்பட் டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.

கே.தங்கவேல்: தவறாக மேற்கொண்ட பத்திரப் பதிவை ரத்து செய்யவும், அதற்கு துணை போனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட பதிவாளருக்கு அதிகாரமளிக்கும் வகையில், கேரளாவில் உள்ளதைப் போல, பிரிவு 55இல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். காலி யாக உள்ள மாவட்ட பதிவாளர் பணியிடங் கள் 54, சார் பதிவாளர் பணியிடங்கள் 84 ஆகியவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

பத்திர எழுத்தர்களுக்கு நலவாரியம்:

கடந்த திமுக ஆட்சியில் ஆவண எழுத் தர் நலவாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டதுடன் கிடப் பில் போட்டுவிட்டது. (அரசாணை 183 நாள் 28.10.2010) தமிழக அரசு இப்பிரச் சனையை கணக்கிலெடுத்து நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். உரிமம் பெற்ற பத் திர எழுத்தர்களின் பட்டியலை ஒவ் வொரு அலுவலகத்திலும் எழுதி வைக்க வேண்டும். அவர்கள் மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். தேவை யான இடங்களில் பத்திர எழுத்தர்களை நியமிக்க வேண்டும். வட்ட தலைநகரங் களில் பத்திரபதிவு அலுவலகங்கள் தொடங்கிட வேண்டும்.இவ்வாறு கே. தங்கவேல் பேசினார்.

முழு உரை:  பதிவுத்துறையில் தனியார்மயம் ஆபத்து!

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)