25,26,27-10-2014 திருப்பூரில் வெள்ளம் எம்எல்ஏ பார்வையிட்டார்
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சங்கிலிபள்ளம் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் நகரின் தெற்குப் பகுதியில் மக்கள் பெருக்கும் மிகுந்த பகுதிகளின் ஊடாக சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடைகள் செல்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஓடைகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருப்பூரில் மிகப்பெரும் நாசம் ஏற்பட்டது. அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள் சேதம் ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாகவும், திருப்பூரின் மேற்கு பகுதியில் உள்ள பல்லடம், பொங்கலூர் வட்டாரங்களில் குளம், குட்டைகள் நிரம்பி வருவதன்காரணமாகவும் சங்கிலிப்பள்ளம் ஓடை,தென்னம்பாளையம் முத்தையன் கோயில்அருகில் உள்ள பாலம், ஓடை பகுதியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த பகுதியை பார்வையிட்ட எம்எல்ஏ கே.தங்கவேல் தேவைப்பட்டால் இரவு நேரங்களில் அருகாமையில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக் கூடம், கோயில் மண்டபங்களில் தங்க வைக்கவும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து இந்த ஓடைக்கு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகளிடம் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
இந்த பகுதியை பார்வையிட்ட எம்எல்ஏ கே.தங்கவேல் தேவைப்பட்டால் இரவு நேரங்களில் அருகாமையில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக் கூடம், கோயில் மண்டபங்களில் தங்க வைக்கவும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து இந்த ஓடைக்கு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகளிடம் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
0 கருத்துகள்:
Post a Comment