Saturday 6 December 2014

திருப்பூர் ரயில்வே மேம்பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா? சட்டப்பேரவையில் கே.தங்கவேல் கேள்வி


 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தொகுதி உறுப்பினர் கே.தங்கவேல் கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக பேரவையில் கே.தங்கவேல் எழுப்பிய வினாக்களும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அளித்த பதில்களும் வருமாறு:

கே.தங்கவேல்: திருப்பூர் ரயில்வே மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அமைச்சர்: திருப்பூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் 2014 பிப்ரவரியில் தொடங்கப்பட்டுள்து.
2015 ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டி முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கே.தங்கவேல்: திருப்பூரில் 2 மேம்பாலம், ஒரு சுரங்கப்பாதை பணி தொடங்கப்பட்டது. இதில் ஒரு மேம்பாலம், ஒரு சுரங்கப் பால பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. ரயில்வே மேம்பால பணிக்கு நிலம் எடுப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து திருப்பூரின் போக்குவரத்தை முறைப்படுத்த அமைச்சர் முன்வருவாரா?

அமைச்சர்: ரயில்வே கடவு 132க்கு மாற்றாக மேம்பாலம் அமைக்க 48.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 58 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.ரயில்வே கடவு 133க்கு மாற்றாக சுரங்கப்பாலம் அமைக்க 27.68 கோடி ரூபாய் ஒதுக்கி, 56 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பாலப்பணிகளை 2015 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கே.தங்கவேல்: அணைப்பாளையம் பாலம் விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனை விரைந்து முடித்து, பாலப்பணிகள் முடிக்கப்படுமா?

அமைச்சர்: ரயில்வே கடவு 131க்கு மாற்றாக மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை உள்ளது.
சோமனூர் சிக்ககனா கல்லூரி செல்லும் சாலையில் நொய்யலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி 40 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. ரயில்வே பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து பாலப்பணிகளை தொடங்கி, வேகமாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)