மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தொகுதி உறுப்பினர் கே.தங்கவேல் கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக பேரவையில் கே.தங்கவேல் எழுப்பிய வினாக்களும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அளித்த பதில்களும் வருமாறு:
கே.தங்கவேல்: திருப்பூர் ரயில்வே மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர்: திருப்பூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் 2014 பிப்ரவரியில் தொடங்கப்பட்டுள்து.
2015 ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டி முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கே.தங்கவேல்: திருப்பூரில் 2 மேம்பாலம், ஒரு சுரங்கப்பாதை பணி தொடங்கப்பட்டது. இதில் ஒரு மேம்பாலம், ஒரு சுரங்கப் பால பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. ரயில்வே மேம்பால பணிக்கு நிலம் எடுப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து திருப்பூரின் போக்குவரத்தை முறைப்படுத்த அமைச்சர் முன்வருவாரா?
அமைச்சர்: ரயில்வே கடவு 132க்கு மாற்றாக மேம்பாலம் அமைக்க 48.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 58 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.ரயில்வே கடவு 133க்கு மாற்றாக சுரங்கப்பாலம் அமைக்க 27.68 கோடி ரூபாய் ஒதுக்கி, 56 சதவிகித பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பாலப்பணிகளை 2015 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கே.தங்கவேல்: அணைப்பாளையம் பாலம் விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனை விரைந்து முடித்து, பாலப்பணிகள் முடிக்கப்படுமா?
அமைச்சர்: ரயில்வே கடவு 131க்கு மாற்றாக மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை உள்ளது.
சோமனூர் சிக்ககனா கல்லூரி செல்லும் சாலையில் நொய்யலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி 40 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. ரயில்வே பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து பாலப்பணிகளை தொடங்கி, வேகமாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
0 கருத்துகள்:
Post a Comment