திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் சிக்குன் குனியா, பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் ஏற்பட்டு வருகின்றன.சில மாவட்டங்களில் இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கான மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்தாலும் போதுமானதாக இல்லை. நோய் தடுப்பு, விழிப்புணர்வு, நிலவேம்பு கசாயம் என மக்களுக்குக் கொடுத்தாலும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் மாற்று மருத்துவத்தையும்பயன்படுத்தலாம்.
சமீபத்தில் தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஓமியோபதி மருத்துவத்தில் “யுபடோரியம் பெர்போலியேட்டம்“ என்னும் மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலையும் குணப்படுத்த முடிந்துள்ளது. இம்மருந்தை பயன்படுத்தி மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2012 முதல் 2013ம் ஆண்டு வரை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சைபெற்றுள்ளனர். பொருளாதாரரீதியாக குறைந்த செலவிலேயே இம்மருந்தை வழங்க முடியும் என ஓமியோபதி மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஓமியோபதி மருத்துவத்தில் “யுபடோரியம் பெர்போலியேட்டம்“ என்னும் மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலையும் குணப்படுத்த முடிந்துள்ளது. இம்மருந்தை பயன்படுத்தி மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2012 முதல் 2013ம் ஆண்டு வரை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சைபெற்றுள்ளனர். பொருளாதாரரீதியாக குறைந்த செலவிலேயே இம்மருந்தை வழங்க முடியும் என ஓமியோபதி மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இத்தகைய சிறப்புவாய்ந்த ஓமியோபதி மருந்தைஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்தாக இலவசமாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.தங்கவேல் எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment