சாக்கடை கழிவு செல்ல தடைப்பட்டு நிற்கும் பகுதியை எம்.எல்.ஏ தங்கவேல் நேரில் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கள்ளம்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியில்லாமல் பல வருடமாக தேங்கிதுர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில், அப்பகுதி மக்களின் வேண்டுகோளின் படி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ திங்களன்று நேரில் ஆய்வு செய்தார்.
கள்ளம்பாளையம் பகுதியில் உள்ள மூன்று வீதிகளிலும் சேர்த்து மொத்தம் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சாக்கடையை முறையாக வடிவமைக்காததால் அப்பகுதியில் சாக்கடை கழிவுகள் தடைப்பட்டு இருக்கிறது.
மேலும் இது தொடர்பாக பல முறை கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள், மேயர் என பலரிடம் முறையிட்டுள்ளோம்.
இந்த சாக்கடை கழிவுகளினால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கள்ளம்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியில்லாமல் பல வருடமாக தேங்கிதுர்நாற்றம் வீசி வந்தது. இந்நிலையில், அப்பகுதி மக்களின் வேண்டுகோளின் படி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ திங்களன்று நேரில் ஆய்வு செய்தார்.
கள்ளம்பாளையம் பகுதியில் உள்ள மூன்று வீதிகளிலும் சேர்த்து மொத்தம் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சாக்கடையை முறையாக வடிவமைக்காததால் அப்பகுதியில் சாக்கடை கழிவுகள் தடைப்பட்டு இருக்கிறது.
மேலும் இது தொடர்பாக பல முறை கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள், மேயர் என பலரிடம் முறையிட்டுள்ளோம்.
இந்த சாக்கடை கழிவுகளினால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment