14 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி ஆண்டுவிழா கே.தங்கவேல் எம்.எல்.ஏ.பங்கேற்பு
திருப்பூர், வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வெள்ளியன்று மாலைஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது:-
குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும் அவசியம். கல்வி என்பது அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக் கூடியது. மாணவர்கள் அரசு பள்ளிகளில் கல்வி கற்க முன்வர வேண்டும். இந்த பள்ளி மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது,பள்ளியின் வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது இல்லை. அரசு பள்ளியில் இத்தகைய விழா சிறப்பாக நடத்துவதென்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல், மற்ற பள்ளியும், ஆசிரியர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment