அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி கே.தங்கவேல் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனு
திருப்பூர் 39, 36 மற்றும் 34வதுவார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.திருப்பூர் மாவட்டத்திற்குட் பட்ட கான்வெண்ட் கார்டன்,பொன்நகர், மணியகாரம்பாளையம் மற்றும் பச்சையப்பாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் திங்கள்கிழமை மக்களைச் சந்தித்தார்.
அப்போது கான்வெண்ட் கார்டன் பகுதியில் ரேசன் கடை அமைப்பதற்கு இடம் இருப்பதால் அங்கு நிதி ஒதுக்கி ரேசன் கடை கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும், பொன்நகர் பகுதியில் சாக்கடை, சாலை, குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள்கேட்டுக் கொண்டனர். காஞ்சிபுரம் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக்கு வடிகால் மீது தடுப்புக் கல் அமைப்பது, சத்துணவு கூடத்திற்கு மின் வசதி ஏற்படுத்தித் தருவது, கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அப்பள்ளித் தலைமை ஆசிரியைசாமுண்டீஸ்வரி முன்வைத்தார்.
இக்கோரிக்கைகள் குறித்துகேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல், மாநகராட்சி இளநிலைப் பொறியாளரிடம் குடிநீர், வடிகால், சாலை வசதிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். இந்த பகுதி பிரமுகர்கள், பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
Post a Comment