Saturday 30 May 2015

மாநகராட்சி பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பரிந்துரைத்திடுக கே.தங்கவேல் எம்.ஏல்.ஏவிடம் கோரிக்கை






மாநகராட்சி பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பரிந்துரைத்திடுக 
கே.தங்கவேல் எம்.ஏல்.ஏவிடம் கோரிக்கை


அடிப்படை வசதியற்ற நிலையில் இருக்கும் மாநகராட்சி பள்ளிகளை புணரமைத்திட பரிந்துரைக்க கோரி கே.தங்கவேல் ஏம்.ஏல்.ஏவிடம் மனுஅளித்தனர்.திருப்பூர் வடக்கு மாநகர பகுதிகளான மண்ணறை, கரும்மாரம்பாளையம், பாளையக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் புதனன்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த மக்கள் சந்திப்பின் போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 50க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். 
குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் சாலை, குடிநீர், கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதில் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகிறது. அதே போல் கரும்மாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மின் இனைப்புகள் சேதமடைந்து பல நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை மாநகராட்சிநிர்வாகம் சீரமைக்க முன்வரவில்லை. பள்ளிக் குழந்தைகள் கழிவறை வசதிகூட இன்றிஅவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மாணவர்களுக்குபோதுமான வகுப்பறைகள் இன்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அடித்தட்டு மாணவர்கள் பயின்று வரும் மாநகராட்சிபள்ளியில் போதிய வசதிகள் செய்து கொடுத்திட பரிந்துரைத்திட வேண்டும். மின்இணைப்பை விரைந்து சரி செய்திட பரிந்துரைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
ரேசன் கடையில் ஆய்வு
மக்கள் சந்திப்பின் போது, கருமாரம்பாளையம் எல்.கே.051 வளர்மதி கூட்டுறவு ரேசன் கடையில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் முறையற்ற வினியோகம் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். புகார்கள் குறித்து ரேசன் கடை ஊழியரிடம் விசாரிணை செய்தார்.
அப்போது குடிமைரேசன் கார்டுகள் எண்ணிக்கைஅடிப்படையில் உரிய அளவில்குடிமை பொருட்களை மாவட்ட நிர்வாகம் வழங்குவதில்லை. மிகவும் குறைவான அளவில் வழங்குவதால், முதல் 15 நாட்களிலேயே அனைத்து பொருட்களும் தீர்ந்து விடுகிறது. இதனால் முந்தியவர்களுக்கே குடிமை பொருள் என்ற நிலை இருக்கிறது. இதனால் ஊழியர்களான எங்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ரேசன் கார்டு எண்ணிக்கை அடிப்படையில் உரிய அளவு குடிமை பொருட்களை வழங்க பரிந்துரைத்திட வேண்டும் என்று கோரினார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)