மாநகராட்சி பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பரிந்துரைத்திடுக
கே.தங்கவேல் எம்.ஏல்.ஏவிடம் கோரிக்கை
கே.தங்கவேல் எம்.ஏல்.ஏவிடம் கோரிக்கை
அடிப்படை வசதியற்ற நிலையில் இருக்கும் மாநகராட்சி பள்ளிகளை புணரமைத்திட பரிந்துரைக்க கோரி கே.தங்கவேல் ஏம்.ஏல்.ஏவிடம் மனுஅளித்தனர்.திருப்பூர் வடக்கு மாநகர பகுதிகளான மண்ணறை, கரும்மாரம்பாளையம், பாளையக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் புதனன்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த மக்கள் சந்திப்பின் போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 50க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.
குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் சாலை, குடிநீர், கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதில் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகிறது. அதே போல் கரும்மாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மின் இனைப்புகள் சேதமடைந்து பல நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை மாநகராட்சிநிர்வாகம் சீரமைக்க முன்வரவில்லை. பள்ளிக் குழந்தைகள் கழிவறை வசதிகூட இன்றிஅவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மாணவர்களுக்குபோதுமான வகுப்பறைகள் இன்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அடித்தட்டு மாணவர்கள் பயின்று வரும் மாநகராட்சிபள்ளியில் போதிய வசதிகள் செய்து கொடுத்திட பரிந்துரைத்திட வேண்டும். மின்இணைப்பை விரைந்து சரி செய்திட பரிந்துரைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
ரேசன் கடையில் ஆய்வு
மக்கள் சந்திப்பின் போது, கருமாரம்பாளையம் எல்.கே.051 வளர்மதி கூட்டுறவு ரேசன் கடையில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் முறையற்ற வினியோகம் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். புகார்கள் குறித்து ரேசன் கடை ஊழியரிடம் விசாரிணை செய்தார்.
அப்போது குடிமைரேசன் கார்டுகள் எண்ணிக்கைஅடிப்படையில் உரிய அளவில்குடிமை பொருட்களை மாவட்ட நிர்வாகம் வழங்குவதில்லை. மிகவும் குறைவான அளவில் வழங்குவதால், முதல் 15 நாட்களிலேயே அனைத்து பொருட்களும் தீர்ந்து விடுகிறது. இதனால் முந்தியவர்களுக்கே குடிமை பொருள் என்ற நிலை இருக்கிறது. இதனால் ஊழியர்களான எங்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ரேசன் கார்டு எண்ணிக்கை அடிப்படையில் உரிய அளவு குடிமை பொருட்களை வழங்க பரிந்துரைத்திட வேண்டும் என்று கோரினார்.
0 கருத்துகள்:
Post a Comment