ரேசன் கடை அமைத்து தரக் கோரி கே.தங்கவேல் எம்.எல்.ஏ விடம் பொது மக்கள் மனு
ரேசன் கடை அமைத்து தரக் கோரி கே.தங்கவேல் எம்.எல்.ஏ விடம் ஞாயிறன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பொது மக்கள் மனு அளித்தனர்.திருப்பூர் தெற்கு மாநகர பகுதிகளான சந்திராபுரம், பண்ணாரியம்மன் நகர்,எல்லோர கார்டன், செரங்காடு, இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிறன்று சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் கே. தங்கவேல் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பங்கேற்றார். அப்போது பொது மக்கள் அவரிடம் மனுக்களை அளித்தனர். அம்மனுக்களில் கூறியிருப்பதாவது:-
குடிநீர் பிரச்சனையினால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.சாக்கடை சுத்தப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை,புதிய சேரன் கடையை அமைத்து தர வேண்டும். மின் கம்பங்களை பழுது பார்த்து தரக் கோரியும், செரங்காடு, பத்மினி கார்டன் மாநகராட்சி பள்ளியில் அடிப்படை வசதிசெய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக் கொண்ட கே.தங்கவேல் எல்.எல்.ஏ இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment