சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தாத அவலம்
கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம் மக்கள் முறையீடு
திருப்பூர் நகரில் 44வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே வீதியில் கொட்டி விடுவதால் கொசுத் தொல்லை, துர்நாற்றத்தில் அவதிப்படுவதாக மக்கள் கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.செவ்வாயன்று காலை மிஷின் வீதி அங்கன்வாடி, நொய்யல் வீதி ரேசன் கடை, கோம்பைத் தோட்டம் சொர்ணபுரி லே அவுட், சத்யாநகர் விரிவு ரேசன் கடை, வெங்கடேஸ்வரா ரேசன் கடை ஆகிய பகுதிகளில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. மக்களைச் சந்தித்தார்.
கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம் மக்கள் முறையீடு
திருப்பூர் நகரில் 44வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே வீதியில் கொட்டி விடுவதால் கொசுத் தொல்லை, துர்நாற்றத்தில் அவதிப்படுவதாக மக்கள் கே.தங்கவேல் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.செவ்வாயன்று காலை மிஷின் வீதி அங்கன்வாடி, நொய்யல் வீதி ரேசன் கடை, கோம்பைத் தோட்டம் சொர்ணபுரி லே அவுட், சத்யாநகர் விரிவு ரேசன் கடை, வெங்கடேஸ்வரா ரேசன் கடை ஆகிய பகுதிகளில் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. மக்களைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, மிஷின் வீதி பகுதியில் நீரேற்றம் செய்யும் மோட்டார் அறையில் குப்பைகளை மூட்டை கட்டி வைப்பதை அகற்ற வேண்டும். சாக்கடையில் அள்ளப்படும் கழிவுகளை வீதியில் கொட்டி வைப்பதை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும். குடிநீர் குழாய் அமைந்திருக்கும் பகுதியில் சாக்கடைக்கு மேலே சிமெண்ட் சிலாப் அமைத்துத் தர வேண்டும். குண்டும், குழியுமான வீதியில் பள்ளி மாணாக்கர்கள், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை இருப்பதால் அதைச் செப்பனிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு வரக்கூடியவர்களால் ஏற்படும் தொந்தரவுகளை களையவும், வீடுகளின் முன்பாக டாஸ்மாக் மதுபானத்தை குடித்துக் கொண்டு குடிமகன்கள் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களால் பெண்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதை போக்கவும் கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து செல்லாண்டியம்மன் படித்துறை பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடப் பணிகளை கே.தங்கவேல் பார்வையிட்டார். நொய்யல் வீதி பகுதியில் இருக்கும் இறைச்சிக்கடை கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்கடைகளில் கொட்டப்படுவதால், துர்நாற்றம் ஏற்பட்டு புழுக்கள் உற்பத்தியாவதாக தெரிவித்தனர். இதனால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே இறைச்சிக் கழிவுகளை முறையாக அகற்ற உரியநடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.அதேபோல் கோம்பைத் தோட்டம் பகுதியில் மாட்டிறைச்சிக் கழிவுகளை மொத்தமாக கொண்டு வந்து கொட்டுவதையும், நொய்யல் ஆற்றங்கரையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் ஏற்படுவதையும் தெரிவித்தனர். எனவே கழிவுகளையும், குப்பைகளையும் தேங்காதவாறு உடனுக்குடன் அகற்றி தூய்மை செய்ய வேண்டினர். சத்யாநகர் பகுதியில் உள்ள தனியார் சாயத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கழிவுகளை வெளியேற்றுவது, சாயக்கழிவுகள், சாம்பல்களை இப்பகுதியில் கொட்டுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டையும் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இப்பகுதியில் உள்ள காலி இடத்தில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அமைத்துத் தரவும் கோரிக்கை வைத்தனர்.வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீதியில் சாலை, சாக்கடை வசதி அமைத்துத் தரவும்இப்பகுதி பெண்கள் கேட்டுக் கொண்டனர்.
கருவம்பாளையம், பூச்சக்காடு, செல்லம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கவேல் எம்.எல்.ஏ., இப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். அனைத்துப்பகுதிகளிலும் பிரதானமாககுடிநீர் சீராக விநியோகம் செய்ய வேண்டும். குப்பைகளையும், சாக்கடை கழிவுகளையும்அள்ளி உடனுக்குடன் அகற்றவேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கேட்டுக் கொண்டனர்.
0 கருத்துகள்:
Post a Comment