Friday 25 September 2015


                             திருப்பூர் தெற்கு தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் சட்டமன்றத்தில் பேசினார்.தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு, சட்டத்துறை மானியக்கோரிக்கை மீது நடைபெற்ற விவாத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. தங்கவேல் தனது தொகுதி கோரிக்கைகள் குறித்து பேசியது வருமாறு:-
                            திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு பாதாளசாக்கடை உடைப்பு ஆகியவற்றால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும். 
                             திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசுக்கலைக்கல்லூரி, எல்.ஆர்.ஜி கலைக்கல்லூரிக்கு கூடுதலான இடங்களையும், வகுப்பறைகளையும் ஏற்படுத்த வேண்டும். திருப்பூர் அரசு பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் பொருள் காட்சி அமைக்கவோ, வணிக நோக்க பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் ஆலோசனையை முற்றிலும் கைவிட வேண்டும்.
                            அரசு மாவட்ட மருத்துவமனையை சிறப்பு பல்நோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையாக உருவாக்க வேண்டும். அவிநாசியிலிருந்து அவிநாசிபாளையம் வரை அறிவிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும்.
                            திருப்பூர் மாநகராட்சியில் கூடுதலான துப்புரவு தொழிலாளர்களை அதிகப்படுத்தி வார்டுகளில் தினசரி குப்பைகளை அள்ள வேண்டும். திருப்பூர் தெற்கு தொகுதியில் பொறியியல் கல்லூரி ஏற்படுத்த வேண்டும். 
                          திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 300 சதவிகிதம் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை முழுமையாக குறைக்க வேண்டும்.திருப்பூர் தெற்கு தொகுதியில் பொழுதுபோக்கு அம்சம் குறைவாக இருப்பதால் மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் சைட்டுகளில் பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும். 
                           திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள கிளை நூலகம் மாவட்ட நூலகமாக செயல்படுகிறது. அதற்கு புதிய கட்டிடம் அமைத்து மாவட்ட நூலகத்தை உருவாக்க வேண்டும்.
                     திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை பணிகளை துவக்கி வேகப்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அதிக மின்கம்பிகள் தாழ்வாக உள்ளது. மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அதை உடனடியாக மாற்ற வேண்டும். 
                     குடும்ப அட்டைகள் அடிக்கும் எல்காட் நிறுவனம் திருப்பூர் மாவட்டத்தில் வந்த பின்னும்கூட புதிய ரேசன் கார்டு வழங்குவதில் முன்னேற்றம் இல்லை. அதை முறைப்படுத்தி கார்டு வழங்க வேண்டும்.
                    திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு பூமி பூஜை போட்டு பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. அதை துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்:

Post a Comment

பிரபல பதிவுகள்

அகழ்வாய்வு (1) அடிப்படை வசதிகள் (5) அரசியல் (14) அரசு பள்ளி (2) அரசு மருத்துவமனை (3) ஆண்டு விழா (1) ஆறுகள் (1) உள்கட்டமைப்பு (2) உள்ளாட்சித் துறை (1) ஏற்றுமதியாளர் சங்கம் (1) ஓமியோபதி மருந்து (1) கடிதம் (3) கட்டுரை (1) கல்வி (3) கவன ஈர்ப்பு தீர்மானம் (1) கழிப்பிடம் (1) கழிவுகள் (1) குடிநீர் (4) குடிநீர் கட்டணம் (1) குடிமனைப்பட்டா (1) குழாய் உடைப்பு (1) கூட்டுறவு தேர்தல்கள் (1) கே.தங்கவேல் MLA (37) கொங்கு மண்டலம் (1) சட்டமன்ற உரை (18) சட்டமன்ற கேள்விகள் (8) சாக்கடை (2) சாதி அரசியல் (1) சாயக் கழிவு (2) சாஸ்த்ரா பாக்டீரியா (1) சிப்காட் (1) சிற்பக் கலை (1) சுகாதாரம் (3) சுங்கவரி (1) சுரங்கப்பாதை. (1) செக்யூரிட்டி தொழிலாளர் (1) செய்தி (6) செய்திகள் (25) செவிலியர் (1) சேதுக்கால்வாய் (1) டெங்கு காய்ச்சல் (1) டெட்ராய்ட் (1) தனியார்மயம் (2) தாது மணல் கொள்ளை (1) தால்சீமியா (1) திருப்பூர் (3) திருப்பூர் கோரிக்கைகள் (1) திருப்பூர் தெற்கு தொகுதி (3) திருப்பூர் மாநகராட்சி (1) துப்புரவு தொழிலாளர் (1) துறைமுகங்கள் (1) தென் மாநிலம் (1) தொழிலாளர் (9) தொழில் (8) தொழில்துறை (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (17) நிதி (1) நெடுஞ்சாலைகள் (3) நேரடி ஆய்வு (5) நொய்யலாறு (2) பத்திரப்பதிவு (2) பிரசுரம் (11) பேட்டி (2) பொது முதலீடுகள் (1) பொதுப்பணித்துறை (1) போக்குவரத்து (1) மக்கள் கோரிக்கை (7) மக்கள் கோரிக்கை மாநாடு (3) மக்கள் சந்திப்பு (9) மத்திய பட்ஜெட் (1) மருத்துவமனை (1) மருத்துவம் (1) மாசுபடுதல்.குடிநீர். (1) மாநகராட்சி (2) மாவட்ட ஆட்சியர் (1) மின்சாரம் (1) மின்வெட்டு (4) மெட்ரோ ரயில் (1) மேம்பாலம் (1) ரயில்வே (1) ரயில்வே கேட் (1) ரேசன் அட்டை (1) வணிகவரி (1) வருவாய்த்துறை (1) வாக்குறுதிகள் (1) வாழ்த்துரை (2) வியாபாரிகள் (1) விவசாயம் (4) வெள்ளம் (1)